;
Athirady Tamil News

ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்க்கவும் !!

0

இந்த வருட கிறிஸ்மஸ் பண்டிகைக் கொண்டாட்டத்தை குறைத்துக் கொள்ளுமாறு தெரிவித்த கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், அலங்காரங்களுக்காக ஆடம்பரமாகச் செலவு செய்வதைத் தவிர்க்குமாறும் அழைப்பு விடுத்தார்.

நீர்கொழும்பு, படபத்தல புனித தெரேசா தேவாலயத்தின் 75ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (17) நடைபெற்ற ஆராதனையின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது தேவாலயங்கள் மற்றும் ஏனைய இடங்களை அலங்கரிப்பதற்காக பணத்தை வீணாக்கக்கூடாது என்று குறிப்பிட்டார்.

பசியில் ஏராளமானோர் வாடுவதால், ஏழைகளுக்கு உணவு வழங்கும் செயலை மாத்திரமே இந்த கிறிஸ்மஸ் காலப்பகுதியில் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.