;
Athirady Tamil News

இந்தியாவில் புதிதாக 2,060 பேருக்கு கொரோனா தொற்று- சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

0

இந்தியாவில் புதிதாக 2,060 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 13-ந் தேதி பாதிப்பு 2,786 ஆக இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து 4-வது நாளாக பாதிப்பு இன்றும் சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 30 ஆயிரத்து 888 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,841 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து75 ஆயிரத்து 149 ஆக உயர்ந்தது. தற்போது 26,834 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 209 அதிகம் ஆகும். கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 4 மரணங்கள் மற்றும் நேற்று கர்நாடகாவில் 2, இமாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரபிரதேசத்தில் தலா ஒருவர் என மேலும் 10 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,905 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.