;
Athirady Tamil News

முறைப்பாடு செய்தும் மரக்கடத்தலை தடுக்க முடியாத பொலிசார்! பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டு!! (PHOTOS)

0

வவுனியா செக்கட்டிபுலவு குஞ்சுக்குளம் பகுதியில் மரக்கடத்தல் காரர்கள் நள்ளிரவில் மரங்களை வெட்டி எடுத்துச்செல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக, வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் பொலிசார் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குஞ்சுக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் காணிக்குள் 13-10-2022 அன்று நள்ளிரவில் நுழைந்த கடத்தல்காரர்கள், அங்கிருந்த பெறுமதிமிக்க தேக்கு மரங்களை வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பூவரசங்குளம் பொலிசாரிடம் இரண்டு முறை முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் பொலிசார் நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாத காரணத்தினால் மரக்கடத்தல் அப்பகுதியில் தொடர்கதையாகியுள்ளது என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டனர்.
அத்துடன் மரக்கடத்தல்காரர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களின் பாதுகாப்பை பொலிசார் உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.