;
Athirady Tamil News

யாழ்.தாவடியில் பலசரக்கு கடையில் போதை கலந்த பாக்குகள் மீட்பு ; உரிமையாளர் கைது!

0

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள பலசரக்கு கடை ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 390 கிராம் போதைப்பாக்கினை பொலிஸார் மீட்டதுடன் கடை உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த கடைக்கு விரைந்த பொலிஸார் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த போதை கலந்த 390 கிராம் பாக்கினை கைப்பற்றியதுடன் , உரிமையாளரான 30 வயதுடைய இளைஞனையும் கைது செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.