;
Athirady Tamil News

கைதான மாணவர்கள் வத்தளை பொலிஸில் !!

0

கைது செய்யப்பட்ட 8 மாணவர்களும் வத்தளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களைத் தேடி மாணவர்கள் சென்றபோது, அவர்கள் அங்கு இல்லை என்று பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில், மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள், தற்போது வத்தளை பொலிஸ் நிலையத்துக்கு சென்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

களனி பல்கலைக்கழகத்துக்கு முன்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று (18) பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன், மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட மூவரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

6 மணித்தியாலங்களுக்கு முன்னதாக போராட்டம் நடத்த அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார், போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியதை அடுத்தே அமைதியின்மை ஏற்பட்டது.

அதன்பின்னர் மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் வத்தளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.