;
Athirady Tamil News

ரஷியாவில் ராணுவ விமானம் மோதிய விபத்து – பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு..!!

0

ரஷியாவின் தெற்கே எயிஸ்க் நகரில் உள்ள குடியிருப்புக் கட்டிடம் ஒன்றின்மீது ராணுவ விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்தபடி பறந்து வந்து மோதி விபத்திற்கு உள்ளானது. இதைத் தொடர்ந்து கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து 9-வது தளம் வரை தீப்பற்றியது. அதனை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதில் அனைத்து தளங்களிலும் உள்ள குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. இந்த விபத்தில் 2 பேர் பலியானதாகவும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், ராணுவ போர் விமானம் தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிஅக்ரித்துள்ளது என மீட்புக்குழு தெரிவித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.