;
Athirady Tamil News

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் நினைவுகூரும் நிகழ்வு!! (படங்கள், வீடியோ)

0

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 22 வருடங்கள் ஆகின்றன.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனை நினைவுகூரும் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது மயில்வாகனம் நிமலராஜனின் உருவப்படத்திற்கு மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் மலர் மாலை அணிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து நினைவுச்சுடரை ஏற்றி, மலர் தூபி ஊடகவியலாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி இரவு அடையாளந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.