;
Athirady Tamil News

போதைப்பொருளுடன் இளைஞன் கைது!!

0

யாழ்ப்பாணம் உரும்பிராய் செல்வபுரம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் 20 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸாரினால் இன்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது நண்பர்களிடமிருந்தே தனக்கு போதை பொருள் கிடைப்பதாகவும், தனது கிராமத்திலும் இலகுவாக போதைப் பொருளை பெற்றுக்கொள்ள முடிவதாகவும், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக போதைப் பொருள் தான் பாவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை நாளைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றில் முற்படுத்த போலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.