;
Athirady Tamil News

நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட ’69’..!!

0

நேற்றைய தினத்திலிருந்து 69 நாட்களுக்குள் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துக்கான தேர்தல், நடத்தப்படும் என்று விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இன்று (20) உறுதியளித்தார்.

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் மற்றும் செயலாளரினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

அதன்போது, விளையாட்டு அதிகாரிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன மேற்குறிப்பிட்ட உறுதிமொழியை வழங்கினார்.

அத்துடன், தேர்தல்கள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆராய 14 நாட்களுக்குள் தேர்தல் குழுவொன்றை அமைச்சர் நியமிப்பார் என்றும் மேலதிக சொலிசிட்டர் நீதிமன்றில் அறிவித்தார்.

2022 செப்டம்பர் 22 ஆம் திகதியிட்ட விளையாட்டு அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் சட்டபூர்வ தன்மையை எதிர்த்து ஜஸ்வர் உமர் லெப்பை மற்றும் உபாலி ஹேவகே ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.