;
Athirady Tamil News

அச்சுவேலியில் தொடரும் வழிப்பறி ; நேற்றும் முதியவரிடம் முகமூடி கொள்ளையர்கள் கொள்ளை!!

0

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் முகமூடி வழிப்பறி கொள்ளையர்களினால் , வீதியில் சென்ற முதியவரிடம் இருந்து 15 ஆயிரம் ரூபாய் பணம் வாள் மற்றும் கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆவரங்கால் – வன்னியசிங்கம் வீதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியில் முதியவர் பயணித்துக்கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த முகமூடி அணிந்த நபர்கள் , முதியவருக்கு கத்தி மற்றும் வாள் என்பவற்றை காட்டி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 15 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவரது ஆவணங்கள் அடங்கிய பை என்பவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வல்லை வெளி பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு வார கால பகுதிக்குள் 10க்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் இதுவரையில் குறித்த கொள்ளை கும்பலை கைது செய்யப்படவில்லை , கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாமையால் தாம் முன்னிரவு நேரங்களில் அச்சத்துடனையே வீதிகளில் பயணிக்கிறோம். எனவே உரிய தரப்புகள் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.