;
Athirady Tamil News

இ.மி.ச மறுசீரமைப்பு அறிக்கை சமர்ப்பிப்பு!!

0

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தனக்கு கிடைத்துள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

குறித்த அறிக்கையை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு அறிக்கையை ஒப்படைக்கவுள்ளதாகவும் நவம்பர் மாதத்துக்குள் சீர்திருத்தங்களை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அறிக்கை வழங்கிய குழு உறுப்பினர்களின் சேவைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகளை முன்வைப்பதற்காக 8 பேர் கொண்ட இந்தக் குழு ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் விசேட ஏற்பாடு திருத்த சட்டம் வெள்ளிக்கிழமை (21) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

புதிதாக அனுமதி பெறுபவர்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குதல் மற்றும் பெற்றோலிய உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்தல், விநியோகித்தல் தொடர்பில் பங்குதாரர்களை தெரிவு செய்வதற்கு ஏற்பாடுகளை செய்தல் இந்த திருத்தத்தின் நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.