;
Athirady Tamil News

ஏக்நாத் ஷிண்டேவின் முதல் மந்திரி பதவி எப்போது வேண்டுமானாலும் பறிபோகும்: உத்தவ் தாக்கரே தரப்பு..!!

0

மராட்டியத்தில் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலமையில் ஒரு அணியாகவும் உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும் சிவசேனா உடைந்துள்ளது. இரு அணிகளும் சிவசேனா கட்சிக்கு உரிமை கோரி வருகிறது. இந்த நிலையில், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணி எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் பா.ஜனதா செல்ல தயாராக இருப்பதாக சாம்னா பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஷிண்டே அணியில் உள்ள 22 எம்.எல்.ஏ.க்கள் புதிய அணியை அமைப்பார்கள். அந்த அணி பா.ஜனதாவுடன் இணையும். ஷிண்டே – பா.ஜனதா அரசு ஒது தற்காலிக ஏற்பாடு தான். ஷிண்டே எந்த நேரமும் முதல்-மந்திரி பதவியில் இருந்து இறக்கப்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.