;
Athirady Tamil News

கொச்சியில் பெண்ணை கொலை செய்து பிளாஸ்டிக் கவரில் உடலை சுற்றி வீட்டில் மறைத்த வாலிபர்..!!

0

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள இளங்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தம்பதியர் வாடகைக்கு குடி வந்தனர். அவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராம்பகதூர்-லட்சுமி என வீட்டு உரிமையாளரிடம் கூறி உள்ளனர். ஆனால் முகவரிக்கான ஆவணங்கள் எதையும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்து சம்பவத்தன்று இரவு துர்நாற்றம் வீசியது. இது குறித்து போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு இளம்பெண் உடல் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது. போலீசார் உடலைக் கைப்பற்றிய போது, கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால், கொலை நடந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என போலீசார் கருதினர். பெண் உடலை பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பெண்ணுடன் தங்கி இருந்தவர் தலைமறைவாகி உள்ளார். எனவே அவர் தான் பெண்ணை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அவர்கள் கொடுத்த முகவரி போலியானது என தெரியவந்துள்ளது. எனவே தலைமறைவானவர் சிக்கினால் தான் உண்மையான முகவரி தெரிய வரும். அவர் எங்கு சென்றார்? கொலை செய்யப்பட்ட பெண் அவரது மனைவி தானா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.