;
Athirady Tamil News

யாழில். உப தபாலதிபரின் கைப்பை அபகரிப்பு!!

0

யாழ்ப்பாணத்தில் உப தபாலதிபரின் கைப்பை வழிப்பறி கொள்ளையர்களால் அபகரித்து செல்லப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,

பெண் உப தபாலதிபர் தனது துவிச்சக்கர வண்டியின் முன் கூடையில் கைப்பையை வைத்தவாறு , மகனை பின்னுக்கு ஏற்றியவாறு வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரு வழிப்பறி கொள்ளையர்கள் ,துவிச்சக்கர வண்டியின் முன் கூடையில் இருந்த கைப்பையை அபகரித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

கைப்பையினுள் , அலுவலக பணம் , அவரின் சொந்த பணம் என ஒரு தொகை பணமும் , முக்கிய ஆவணங்கள் சிலவும் இருந்ததாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.