;
Athirady Tamil News

தினசரி பாதிப்பு சற்று உயர்வு- இந்தியாவில் புதிதாக 1,112 பேருக்கு கொரோனா..!!

0

இந்தியாவில் புதிதாக 1,112 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 862, நேற்று 830 ஆக இருந்த நிலையில் 2 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 46 ஆயிரத்து 880 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,892 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 97 ஆயிரத்து 72 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 20,821 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் நேற்று மேகாலயா, மிசோரத்தில் தலா ஒருவர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட 4 பலிகள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5,28,987 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.