;
Athirady Tamil News

விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ரஞ்ஜன் ராமநாயக்க!!

0

வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற ரஞ்சன் ராமநாயக்க குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று, கட்டார் எயார்வேஸ் விமானத்தில் கத்தார் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வதே அவரது திட்டமாக இருந்தது.

எனினும், நிலுவையிலுள்ள இரண்டு வழக்குகளினால் வெளிநாடு செல்ல நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளதால், அவரை திருப்பி அனுப்ப குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.