;
Athirady Tamil News

கேரளாவில் பி.டி.உஷா பள்ளியில் தடகள பயிற்சியாளர் தூக்குப்போட்டு தற்கொலை..!!

0

இந்தியாவின் தடகள ராணி என்று அழைக்கப்பட்டவர் பி.டி.உஷா. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த இவர் ஆசியப் போட்டியில் 4 தங்கப் பதக்கத்தையும் 7 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றவர். தடகளப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பி.டி.உஷா, தற்போது கோழிக்கோடு மாவட்டம் பாலுச்சேரி கினாலூரில் தடகள பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த பயிற்சி மையத்தில் இணை பயிற்சியாளராக வேலை பார்த்தவர் ஜெயந்தி (வயது 27). இவர் அங்கேயே விடுதியில் தங்கி பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை ஜெயந்தி, பயிற்சிக்கு வரவில்லை. அவரை தேடி விடுதிக்குச் சென்று பார்த்த போது, அறையில் அவர் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயிற்சி மைய நிர்வாகிகள், பாலுச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து ஜெயந்தி உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஜெயந்தி, தமிழகத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தான் அவர் பணிக்குச் சேர்ந்துள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.