;
Athirady Tamil News

இந்தியாவில் 5 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டியது..!!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,208 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த 22-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 2,112 ஆக இருந்தது. மறுநாள் 1,994, 24-ந்தேதி 1,334, 25-ந்தேதி 862, 26-ந்தேதி 830, நேற்று 1,112 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 49 ஆயிரத்து 88 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 691 பேர் குணமாகி உள்ளனர். இதில் நேற்று நலம் பெற்று வீடு திரும்பிய 3,619 பேர் அடங்குவார்கள். தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைபெற்று வருவோர் எண்ணிக்கை 1,423 குறைந்துள்ளது. அதாவது இன்றைய நிலவரப்படி 19,398 பேர் சிகிச்சையில் உள்ளனர். தொற்று பாதிப்பால் நேற்று மகாராஷ்டிரத்தில் மட்டும் 3 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலி எண்ணிக்கை 9 சுகாதாரத்துறை கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5,28,999 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.