;
Athirady Tamil News

மருத்துவமனைக்கு ஹெலிகொப்டரில் அழைத்துவரப்பட்ட முக்கியஸ்தர்!!

0

ஹெலிகொப்டரில் அழைத்து வரப்பட்ட முக்கியத்தர் ஒருவர், கொழும்பு தேசிய மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கடற்படையின் முன்னாள் தளபதி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹெலிகொப்டரில் அழைத்து வரப்பட்ட அவர், சாதாரண நடைமுறைகளுக்கு அப்பால், நேரடியாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் தேசிய மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு மேலதிகமாக வெளி மருத்துவர்களும் அவருக்கு சிகிச்சையளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து மருத்துவமனை பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.