;
Athirady Tamil News

போதையொழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு !! (படங்கள், வீடியோ)

0

போதையொழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நற்பிட்டிமுனை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது.

கல்முனை தலைமையக பொலிஸாரின் ஏற்பாட்டில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ எல்.ஏ.வாஹிட் நெறிப்படுத்தலில் இச்செயலமர்வு சிறப்பாக நடைபெற்றது.

இதன் போது இச்செயலமர்வின் வளவாளர்களாக பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஜீ.துசார திலங்க ஜெயலால் மற்றும் அம்பாறை மாவட்ட சிறுவர் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரியும் பெண் பிரதம பொலிஸ் பரிசோதகருமான டயனி கமகேயும் கலந்து கொண்டிருந்தனர்.

இச்செயலமர்வின் போது போதைப்பொருளின் தாக்கங்கள் சமூக ஊடகங்களின் தாக்கங்கள் வீதி போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கவுரைகள் நிகழ்த்தப்பட்டன.
இச்செயலமர்வில் பாடசாலை அதிபர் எம்.எல் பதியுதீன் பிரதி அதிபர் ஏ.எம் சாலிதீன் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.