;
Athirady Tamil News

பெங்களூருக்கு புறப்பட்ட தனியார் விமானத்தின் என்ஜின் தீப்பிடித்தது- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..!!

0

டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு தனியார் விமானம் நேற்று புறப்பட்டது. விமானத்தில் 184 பயணிகளும், ஊழியர்களும் ஏறிய பின்பு விமானம் பறக்க தொடங்கியது. விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் விமானத்தின் என்ஜினில் இருந்து கரும்புகை வந்தது. அதோடு என்ஜினும் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி விமான நிலைய அதிகாரிகள் விமானிக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக அவர் விமானத்தை மீண்டும் டெல்லி விமான நிலையத்திலேயே சாமர்த்தியமாக தரை இறக்கினார். அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டனர். இதுபற்றி தனியார் விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் புறப்பட்டதும், அதன் ஒரு பக்க என்ஜின் செயல் இழந்தது தெரியவந்தது. உடனடியாக விமானம் தரை இறக்கப்பட்டது.

அதில் இருந்த பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே தனியார் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விமான போக்குவரத்து ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த சம்பவம் நேற்று டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.