;
Athirady Tamil News

கரைவலை தொழிலாளி கடல் இழுத்து உயிரிழப்பு!!

0

முல்லைத்தீவு கருநாட்டுக்கேணி கடற்கரையில் கரைவலை தொழில் செய்துவரும் 23 அகவையுடைய தொழிலாளி ஒருவர், கடலில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

நேற்று (29) காலை, கயிறு இழுத்த வேளை கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார். அவரை தேடும் நடவடிக்கையில் கடற்தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

காணாமற்போன மீனவரின் சடலம், கொக்குளாய் கடற்கரையில் இன்று (30) காலை கரைஒதுங்கியுள்ளது.

உடலத்தினை மீட்ட மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கொக்கிளாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இவர் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர் என அறியமுடிகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.