;
Athirady Tamil News

நீண்ட கால ஹெரோயின் கடத்தல் கண்டுபிடிப்பு!!

0

நீண்ட காலமாக ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் மட்டக்குளி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர். சேனாதீரவின் மேற்பார்வையில் மட்டக்குளி – சமித்புர பகுதியில் அமைந்துள்ள வீட்டு வளாகத்தில் சோதனை நடத்தியது.

இதன்போது சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 4 கிராம் 180 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் பணம் என்பன கைப்பற்றப்பட்டதுடன், 39 வயதான சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைக்காக குறித்த சந்தேக நபர் மட்டக்குளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.