;
Athirady Tamil News

மிசோரத்தில் பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்து 4 பேர் உடல் கருகி பலி..!!

0

மிசோரம் மாநிலம் அங்காவர்மா மாவட்டம் துங்கிலா கிராமத்தில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது டேங்கரில் இருந்து திடீரென பெட்ரோல் கசிந்து ஒழுகியது. இதை பார்த்ததும் டிரைவர் லாரியை நிறுத்தினார். இந்த நிலையில் லாரி டேங்கரில் இருந்து பெட்ரோல் வெளியேறுவதை பார்த்த கிராம மக்கள ஓடி வந்து பாத்திரங்களில் பெட்ரோலை பிடித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பற்றியது. இதில் பெட்ரோல் பிடித்து கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் தீயில் சிக்கி கருகினார்கள். இதுபற்றி அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். 18 பேர் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடினார்கள். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபபட்டு வருகிறது. இதில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என தெரிகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.