;
Athirady Tamil News

அரசாங்க சொத்துக்களை வாங்கிய புலம்பெயர் இலங்கையர்கள் !!

0

இலங்கையில் உள்ள வீடுகளை அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு 3 வீடுகளை விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம் 43,700 அமெரிக்க டொலர்களை அரசாங்கம் ஈட்டியுள்ளது.

பன்னிபிட்டிய – வியாட்புர, கொட்டாவ மற்றும் மாலம்பே பிரதேசங்களில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீட்டுத் தொகுதிகளில் இந்த 3 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இன்னும் 10 வீடுகளை வாங்குவதற்கு புலம்பெயர்ந்த இலங்கையர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு இராச்சியம், பிரித்தானியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.