;
Athirady Tamil News

10ம் வகுப்பு மாணவி உடன் படிக்கும் 5 மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்..!!

0

டெல்லி குருகிராம் பகுதியில் ஓட்டல் அறை ஒன்றில் வைத்து 10 ஆம் வகுப்பு மாணவியை அவரது நண்பர்கள் உள்பட 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 14 வயது சிறுமியின் தாயார் போலீசாரிடம் அளித்த புகாரில் கூறி இருப்பதாவது:- சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு எனது மகள் வீட்டை விட்டு வெளியே சென்றார். அருகே இருக்கும் பூங்காவுக்கு அவர் சென்றதாகவே நாங்கள் நினைத்தோம். இருப்பினும், அவர் நீண்ட நேரமான பின்னரும் திரும்பி வரவில்லை என்பதால் அச்சமடைந்து தேட தொடங்கினோம். அந்த பூங்காவுக்கு சென்று பார்த்த போது அவர் அங்கு இல்லை.

இரவு முழுவதும் பல இடங்களில் தேடியும் எனது மகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் வீட்டின் அருகே அவர் இருப்பதைக் கண்டுபிடித்தோம். இரவு எங்குச் சென்றாய் என்ன ஆனது எனக் கேட்ட போது தான், அவர் அழுது கொண்டே தனக்கு நடந்த கொடுமை குறித்து கூறினார். எனது மகளை அவரது இரண்டு நண்பர்கள் பைக்கில் ஓட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஓட்டல் அறையில் வைத்து அவரை 5 பேர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறினார்.

மேலும், இதை வெளியே யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்” என கூறி உள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். மற்ற மூன்று குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட அந்த சிறுமி அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.