;
Athirady Tamil News

6-ம் வகுப்பு மாணவியை 2-வது திருமணம் செய்த வாலிபர்: பெற்றோரிடம் விசாரணை..!!

0

ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த குப்பம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 11 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் கிராமத்தின் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். இவருக்கு திருமணமாகி மனைவி இறந்து விட்டார். இந்த நிலையில் வாலிபருக்கு 6-ம் வகுப்பு மாணவியை 2-வது திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி மாணவிக்கும் வாலிபருக்கும் அவரது வீட்டில் வைத்து திருமணம் நடந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம் நடந்ததாக திருப்பதியில் உள்ள குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தைகள் நல அலுவலர் அருணாஸ்ரீ மற்றும் குப்பம் போலீசார் மணமகன் வீட்டிற்கு சென்று அங்கிருந்த சிறுமியை மீட்டு திருப்பதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர் அருணாஸ்ரீ குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் பெற்றோர் மற்றும் மணமகன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.