;
Athirady Tamil News

ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை !!

0

ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்த நபரொருவரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, அவருக்கு ஆயுள் தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதித்து, இன்று (01) தீர்ப்பளித்தார்.

2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதியன்று, மஹாபாகே பகுதியில் வைத்து 4 கிராம் ஹெரோயினுடன் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

தீர்ப்பை வாசிக்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகளை அரச தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக அறிவித்த நீதிபதி, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.