;
Athirady Tamil News

புங்குடுதீவு உலகமையத்தின் ஏற்பட்டில் மாணவிகள் கௌரவிப்பு நிகழ்வு!! ( படங்கள் இணைப்பு )

0

யாழ்/புங்குடுதீவு மத்திய கல்லூரியில் மாகாணமட்ட மகளிர் உதைபந்தாட்டப்போட்டியில் 2ஆவது இடத்தைப்பெற்று தேசியமட்டப்போட்டிக்குத் தெரிவாகிய வீராங்கனைகளையும் , செம்பு நடனப்போட்டியில் மாகாணமட்டத்தில் முதலாவது இடத்தைப்பெற்று சாதனை படைத்த மாணவிகளையும் கோலாகலமாக கௌரவிக்கும் நிகழ்வு 28 – 10 – 2022 அன்று புங்குடுதீவு உலகமையம் மற்றும் புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகத்தினரின் அனுசரணையில் கல்லூரி நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்லூரியின் அதிபர் ஆ.விமலேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. T .ஞானசுந்தரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு. P .சகிலன் ( உதவிக்கல்விப்பணிப்பாளர் – உடற்கல்வி – தீவகம் ) , செல்வி .T.துசியா ( ஆசிரிய ஆலோசகர் உடற்கல்வி தீவகம் ) ஆகியோரும்
கௌரவ விருந்தினர்களாக வேலணை பிரதேச சபை உறுப்பினர் திரு. கருணாகரன் நாவலன் , புங்குடுதீவு உலகமையம் அமைப்பின் தலைவர் சபா. பரமேஸ்வரன் , புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழக தலைலர் கருணாகரன் குணாளன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.