;
Athirady Tamil News

யாழ்.மாவட்ட செயலகத்தில் துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு.!!

0

பொருளாதார ரீதியாக நலிவுற்ற நிலையில் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியொருவருக்கு இன்றையதினம் (02.11.2022) மாவட்ட செயலகத்தில் துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தரின் நிதியுதவியில் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்கள் ஊடாக இத் துவிச்சக்கர வண்டி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இதில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சி.என்.கமலராஜன், மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் கே.மனோகரன் மற்றும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.