;
Athirady Tamil News

தினசரி பாதிப்பு 2-வது நாளாக உயர்வு: புதிதாக 1,321 பேருக்கு கொரோனா..!!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 1,046 ஆக இருந்தது. நேற்று 1,188 ஆக உயர்ந்த நிலையில் இன்று 1,321 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 57 ஆயிரத்து 149 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பால் மகாராஷ்டிரத்தில் 2, மத்திய பிரதேசம், மேற்கு வங்கத்தில் தலா ஒருவர் என நேற்று 4 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 5-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,461 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,457 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 10 ஆயிரத்து 590 ஆக உயர்ந்தது. தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 16,098 ஆக சரிந்துள்ளது. இது நேற்றைவிட 145 குறைவாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.