;
Athirady Tamil News

வவுனியாவில் இரு சொகுசு பேரூந்துகள் விபத்துக்குள்ளான நிலையில் மேலும் ஒர் அதிசொகுசு பேரூந்தும் விபத்து!! (படங்கள்)

0

வவுனியா ஏ9 வீதியில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு அண்மித்த பகுதியில் அதிசொகுசு பேரூந்து இன்று (05.11.2022) நள்ளிரவு 12.20 மணியளவில் வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில் இன்று (05.11.2022) நள்ளிரவு 12.00 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி சாரதி உட்பட மூவர் உயிரிழந்ததுடன் பேரூந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் இவ் விபத்து ஏற்பட்ட சமயம் அதே திசையில் பயணித்த மற்றுமொரு சொகுசு பேரூந்து சாரதி தனது பேரூந்தை விபத்து ஏற்பட்டதை தவிர்க்கும் முகமாக வீதியின் ஒரமாக செலுத்தியிருந்தமையுடன் பேரூந்து சிறு சேதங்களுக்குள்ளாகியிருந்தது.

இந்நிலையில் ஏ9 வீதியில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு அண்மித்த பகுதியில் வீதியில் தரித்து நின்ற பேரூந்தினை முந்திச்செல்ல முற்பட்ட மற்றோரு அதிசொகுசு வீதியினை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியிருந்தமையுடன் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை

மாவட்டத்தில் இன்றைய தினத்தில் மாத்திரம் 3 அதிசொகுசு பேரூந்துகள் விபத்துக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா விபத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவி உட்பட மூவர் மரணம்: பெயர் விபரம் வெளியாகின!! (படங்கள்)

வவுனியாவில் பாரிய பேரூந்து விபத்து – மூவர் உயிரிழப்பு – 16 பேர் படுகாயம்!! (PHOTOS)

You might also like

Leave A Reply

Your email address will not be published.