;
Athirady Tamil News

துபாயில் இருந்து மங்களூருவுக்கு செல்போன், கைக்கடிகாரத்தில் தங்கம் கடத்தி வந்த பயணி கைது..!!

0

வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது. இதுபோல மங்களூரு விமான நிலையத்திலும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் துபாயில் இருந்து மங்களூருவுக்கு வந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணியின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த கைக்கடிகாரம் மற்றும் செல்போன்களில் தங்கம் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கைக்கடிகாரம் மற்றும் செல்போன்களில் மறைத்து வைத்திருந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.11.78 லட்சம் ஆகும். தங்கத்தை கடத்தி வந்ததாக கேரளாவின் காசர்கோடு முட்டத்தோடியை சேர்ந்த பயணி இப்ராகீம் மசூத் (வயது30) என்பவரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.