;
Athirady Tamil News

கழுத்துகளில் முடிச்சு போட்ட தந்தை கைது!!

0

தன்னை விட்டுச் சென்ற மனைவியை மீண்டும் அழைப்பதற்காக, தன்னுடைய ஐந்து வயது மகள் மற்றும் 16 வயது மகள் ஆகிய இருவரின் கழுத்துகளிலும் முடிச்சுப் போட்ட, அப்பிள்ளைகளின் தந்தையும், விட்டுச் சென்ற மனைவியின் கணவனும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவி வீட்டை விட்டு வெளியேறி சென்றமையால், இரண்டு பிள்ளைகளுடன் தனிமையில் வாழ்ந்துவந்த சந்தேகநபர், தனது மனைவியை மீண்டும் அழைத்துவருவதற்கு பல சந்தர்ப்பங்களில் முயன்றுள்ளார்.

அவருடைய அந்த முயற்சி கைகூடாமையை அடுத்தே, தன்னுடைய பிள்ளைகள் இருவரின் கழுத்துகளிலும் இவ்வாறு முடிச்சு போட்டுள்ளார் என அறியமுடிகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.