;
Athirady Tamil News

3 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!!

0

இந்தியாவில் புதிதாக 1,016 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 6-ந்தேதி பாதிப்பு 1,132 ஆக இருந்தது. மறுநாள் 937, 8-ந்தேதி 625, நேற்று 811 ஆக இருந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு பாதிப்பு இன்று மீண்டும் ஆயிரத்தை தாண்டி உள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 63 ஆயிரத்து 968 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பால் மகாராஷ்டிராவில் 2 பேர், ராஜஸ்தானில் ஒருவர் என மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,514 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,385 பேர் நலமாகி உள்ளனர். இதுவரை குணமடைந்தோர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 20 ஆயிரத்து 267 ஆக உயர்ந்தது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 13,187 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.