;
Athirady Tamil News

பகடிவதை புகார்களை இனி சீ.ஐ.டி விசாரிக்கும்!!

0

பல்கலைக்கழக மாணவர்கள் சம்பந்தப்படும் பகடிவதைகள் தொடர்பாக பெறப்படும் முறைப்பாடுகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு (சீ.ஐ.டி) அனுப்பி வைக்குமாறு, அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, இன்று (10) பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய பகடிவதைகள் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் பெறப்படும் முறைப்பாடுகளை சீ.ஐ.டிக்கு அனுப்பப்பட்டு அவர்களால் விசாரிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்போதுள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கு அமைய கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.