;
Athirady Tamil News

தெல்லிப்பளையில் வீடுடைத்து திருடிய குற்றத்தில் 20 வயது இளைஞன் கைது!!

0

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெல்லிப்பளை பகுதியில் உள்ள வீடொன்றில் ஆட்கள் அற்ற நேரம் வீட்டினை உடைத்து அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்டிருந்தன.

அவை தொடர்பில் உரிமையாளரால் தொல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கட்டுவன் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனை கைது செய்தனர்

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , வீட்டில் திருடப்பட்ட தொலைக்காட்சி பெட்டி , நீர் இறைக்கும் இயந்திரம் ஆகியவை மீட்கப்பட்டு உள்ளதாகவும் , தொடர்ந்தும் இளைஞனிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.