;
Athirady Tamil News

புதிதாக 734 பேருக்கு தொற்று- கொரோனாவுக்கு 2 பேர் பலி..!!

0

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 734 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று பாதிப்பு 833 ஆக இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 66 ஆயிரத்து 377 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் நேற்று கர்நாடகா, மேற்கு வங்கத்தில் தலா ஒருவர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட ஒரு மரணத்தை கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,531 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 977 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 23 ஆயிரத்து 539 ஆக உயர்ந்தது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 12,307 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 246 குறைவு ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.