;
Athirady Tamil News

11 இலங்கை மீனவர்களை கைது செய்தது இந்திய கடற்படை..!!

0

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே, இலங்கை மீனவர்கள் 11 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்தனர். இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த அவர்களை 2 மீன்பிடி படகுகளுடன் கைது செய்த கடற்படையினர், அவர்களை காக்கிநாடா காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். வானிலை மற்றும் காற்றின் வேகம் காரணமாக எல்லை தாண்டியதாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 11 பேரும் நாளை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும், மீனவர்கள் கைது தொடர்பாக வெளியுறவுத்துறை மூலமாக இலங்கை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கூறினார். இலங்கை மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில் இருந்த சுமார் 500 கிலோ மீன்களை கடற்படை போலீசார் ஏலம் விட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.