;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை 40 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.!! (PHOTOS)

0

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை 40 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து படகு ஒன்றில் குருநகர் கடற்கரை பகுதிக்கு கஞ்சா கடத்தி வரப்பட்ட நிலையில், கடற்படையினரின் சோதனை நடவடிக்கையின் மூலம் கஞ்சா மீட்கப்பட்டது.

கஞ்சாவை கடத்தி வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனையும், மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.