;
Athirady Tamil News

நவாலியில் சூழகம் அமைப்பினால் மரநடுகை!! ( படங்கள் இணைப்பு )

0

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாணம் மானிப்பாய் நவாலி மகாவித்தியாலயத்திலும் , அதன் முன்பாக அமைந்துள்ள அரசடி வீதியிலும் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் நவாலி அரசடி வீதியை சேர்ந்த அமரர் பொன்னையா கந்தசாமி அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவாக இன்றைய தினம் ( 14- 11 – 2022 )
30 மரக்கன்றுகள் நடுகைசெய்யப்பட்டன .

திரு. சபாரத்தினம் கேதீஸ்வரன் ( பிரான்ஸ் ) அவர்களின் நிதியுதவியில் நடைபெற்று மேற்படி மரநடுகை நிகழ்வில் பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள், மாணவர்கள் , நவாலி விவசாய சம்மேளன பொருளாளர் செ.ராஜேந்திரம் , மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்களான ஜோன் ஜிப்ரிகோ , வன்னியசேகரம் , வாசன் மற்றும் யாழ் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் மற்றும் சூழகம் அமைப்பின் உறுப்பினர்களான ச.கேதீஸ்வரன் , க.குணாளன் , கனாதீபன் , தர்சன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததோடு சூழகம் அமைப்பினரால் பாடசாலை மாணவர்களுக்கு மரக்கன்றுகளும் , வாசிப்பு புத்தகங்களும் வழங்கப்பட்டிருந்தன .

You might also like

Leave A Reply

Your email address will not be published.