;
Athirady Tamil News

“இந்தியாவில் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை ஐ.டி. துறை உருவாக்கும்” – இன்போசிஸ் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் நம்பிக்கை..!!

0

கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட், அமேசான் உள்ளிட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செலவுகளையும், விரையங்களையும் குறைக்க பெரிய அளவில் ஆள் குறைப்பு செய்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் ஐ.டி. துறையில் புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான கிரிஸ் கோபாலகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 25-வது பெங்களூரு டெக் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், ஐ.டி. துறையில் குறுகிய கால ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்றும், கடந்த 25 ஆண்டுகளை விட அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஐ.டி. துறை நல்ல வளர்ச்சியை காணும் என தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.