;
Athirady Tamil News

யாழ்.போதனாவில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் மற்றும் பெண்ணின் சடலம்!!

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் , அடையாளம் காணப்படாத நிலையில் ஆணொருவரதும் , பெண்ணொருவரதும் சடலம் காணப்படுவதாகவும் , அவற்றை அடையாளம் காண உதவுமாறு கோரப்பட்டுள்ளது.

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருவடி நிலை கடற்கரையில் கடந்த ஒக்டொபர் மாதம் 28ஆம் திகதி கரையொதுங்கிய ஆணொருவரின் சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

அதேவேளை யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த ஒக்டொபர் மாதம் 30 ஆம் திகதி பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டு , பொலிஸாரினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

குறித்த இரு சடலங்களையும் அடையாளம் காண உதவுமாறு யாழ்.போதனா வைத்திய சாலை தரப்பினர் கோரியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.