;
Athirady Tamil News

பிளஸ் 2 வரை படித்து விட்டு அக்கு பஞ்சர் சிகிச்சை: இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலி டாக்டர் கைது..!!

0

கர்நாடக மாநிலம் பெங்களூரு மதிகெரெ பகுதியில் அக்குபஞ்சர் கிளினிக் வைத்து நடத்தி வருபவர் வெங்கடநாராயணா. இவர் சிகிச்சை அளிப்பதாக்கூறி, சிச்சைக்கு வரும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளாத இளம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக யஷ்வந்த்பூர், பசவனகுடி மற்றும் சைபர் க்ரைம் காவல் நிலையத்திற்குச் சென்ற இளம் பெண் ஒருவர், வெங்கடநாராயணா தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், தன்னை போன்ற கிளினிக் வரும் இளம்பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுள்ளார் எனப் புகார் அளித்தார்.

அவர் அளித்தப்புகாரின் போரில் யஷ்வந்த்பூர், பசவனகுடி மற்றும் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த வெங்கடநாராயணாவை தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போது, கடந்த நவம்பர் 16ம் தேதியை வெங்கடநாராயணாவை கைது செய்தனர். அதனை தொடர்ந்து

போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில்

வெங்கடநாராயணா வெறும் பிளஸ் 2 மட்டுமே படித்துள்ளதாகவும், தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

மேலும் ஒரு பயிற்சி வகுப்பில் அக்கு பஞ்சர் மருத்துவம் பற்றித்தெரிந்துக்கொண்டு, இரண்டு வருடம் பயிற்சி எடுத்துள்ளார். அதன்பின்னர் இவரது வீட்டில் அருகே அக்குபஞ்சர் மையத்தை தொடங்கி சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சைக்கு வரும் இளம் பெண்கள் மற்றும் குடும்ப பெண்களிடம் ஆடையை கழற்றச்சொல்லி, தகாத முறையில் ஈடுபட்டுள்ளார். மேலும் சிகிச்சை என்ற பெயரில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறு செய்யும் செய்கையை தனது செல்போனை மறைத்து வைத்து வீடியோவாக எடுத்து பல பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.