;
Athirady Tamil News

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.72 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்..!!

0

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டு சர்க்கரை ஏலம் நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 3 ஆயிரத்து 484 மூட்டை களில் நாட்டு சர்க்கரையை கொண்டு வந்தனர்.இதில் முதல்தர திடம் ரக சர்க்கரை 60 கிலோ மூட்டை குறைந்தபட்ச விலையாக 2,500 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2,590 ரூபாய்க்கும் விற்பனையானது. அதேபோல் மீடியம் ரக சர்க்கரை குறைந்தபட்ச விலையாக 2 ஆயிரத்து 450 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் 2 ஆயிரத்து 900 மூட்டைகளில் உள்ள 1 லட்சத்து 74 ஆயிரம் கிலோ எடையுள்ள நாட்டு சர்க்கரை 72 லட்சத்து 84 ஆயிரத்து 100 ரூபாய்க்கு பழனி பால தண்டாயுதபாணி சாமி கோவில் நிர்வாகம் கொள்முதல் செய்தது. இந்த தகவலை விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.