;
Athirady Tamil News

தாய், மகன் உள்ளிட்ட மூவர் கைது!!

0

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு பொக்கனை பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் தாய், மகன் உள்ளிட்ட மூவர் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த தாயும், மகனும் மற்றும் அவர்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் அயலவர் என மூவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்களிடமிருந்து 15 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.