;
Athirady Tamil News

இந்தியாவில் புதிதாக 492 பேருக்கு கொரோனா..!!

0

இந்தியாவில் புதிதாக 492 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று பாதிப்பு 556 ஆக இருந்த நிலையில் இன்று 500-க்கும் கீழ் சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 69 ஆயிரத்து 15 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிரத்தில் நேற்று ஒருவர் இறந்துள்ளார். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 3-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,574 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 781 பேர் குணமாகினர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 31 ஆயிரத்து 952 ஆக உயர்ந்தது. தற்போது 6,489 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 293 குறைவு ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.