;
Athirady Tamil News

கலை நிகழ்ச்சிக்கு சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர் கைது..!!

0

கேரள மாநிலத்தில் கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கலோல்சவம் என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் அழைத்து சென்றனர். இதில் எர்ணாகுளம் பகுதியில் இருந்து கலை நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவி ஒருவருக்கு அவரை அழைத்து சென்ற ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சம்பவத்தை மறைத்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதே நேரம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கிரண் என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை எர்ணாகுளம் போலீசார் தேடி வந்தனர். இதில் ஆசிரியர் கிரண், நாகர்கோவிலில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கேரள போலீசார் நாகர்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் உதவியுடன் நாகர்கோவிலில் பதுங்கி இருந்த ஆசிரியர் கிரண் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் எர்ணாகுளம் அழைத்து சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கிரண் மீது ஏற்கனவே இதுபோன்ற புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.