;
Athirady Tamil News

9 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி 54 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது..!!

0

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக செயற்கைக் கோள்களை வடிவமைக்கிறது. இந்நிலையில், இஸ்ரோ சார்பில் பி.எஸ்.எல்.வி.-சி54 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டில் ஓசன் சாட்-3 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் (இலுஎஸ்-6) மற்றும் 8 சிறிய வகை நானோ செயற்கை கோள் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் 4 நிலைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிலையும் தனித்தனி உந்துவிசை அமைப்புடன் செயல்படும் திறன் கொண்டது. முதல் மற்றும் 3-வது உந்து நிலைகளில் திட எரிபொருளும், 2-வது மற்றும் 4-வது நிலை திரவ உந்துசக்தியும் பயன்படுத்தப்படுகிறது. பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் இது 56-வது திட்டப்பணி என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.