;
Athirady Tamil News

நீர்வேலியில் வெள்ளவாய்க்கால் மற்றும் மதகை மூடி சீமெந்து மேடை!!

0

யாழ்ப்பாணம் , வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கரந்தன் சந்தியில் உள்ள கடை கட்டட உரிமையாளரால் , கட்டடத்தின் முன்பாக உள்ள மதகு மற்றும் வெள்ள வாய்க்கால் என்பவற்றை மூடி சீமெந்து மேடை அமைக்கப்பட்டுள்ளது.

அவரது செயற்பாட்டினால் வெள்ளம் வடிந்தோட முடியாது வீதிகளில் தேங்கி நின்றமையால் , அது தொடர்பில் ஊரவர்களால் பிரதேச சபை மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் என்பவற்றுக்கு முறையிடப்பட்டது.

அதனை அடுத்து , வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் குறித்த விடயம் தொடர்பில் கடிதம் மூலம் பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் , அது தொடர்பில் வீதி அபிவிருத்தி திணைக்களத்துடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச சபை செயலாளருக்கு , பிரதேச சபை தவிசாளர் பணித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.